ஆரண்ய காண்டத்தில், சித்ரகூடத்தை விட்டு ராமர் சென்று வனத்துக்குள் தொடர்ந்து பயணிப்பது, விராதன் எனும் ராட்சசனை வதம் செய்வது, தவத்தால் பழுத்த பல ரிஷிகளையும் சந்திப்பது, அகஸ்திய முனிவரை தரிசிப்பது, அவர் ஆலோசனைப்படி பஞ்சவடியில் சென்று வாழ்வது, அங்கே வந்து தகாது நடந்து கொண்ட சூர்ப்பனகையை லக்ஷ்மணன் தண்டிப்பது, அதன் பலனாய் கர தூஷணர்கள் வந்து ராமருடன் போர் செய்வது, அவர்களை ராமர் வதம் செய்வது, சீதையின் அழகைப்பற்றி சூர்பனகையிடமிருந்து கேட்ட ராவணன், மாரீச மானின் உதவியுடன் சீதையைக் கவர்ந்து செல்வது, , சீதையை இழந்த ராமர் அளவிலா துக்கத்தில் ஆட்படுவது, கழுகு ஜடாயு சீதைக்கு உதவ முயன்று ராவணனால் வெட்டுப் பட்டு சாவது, ராவணன் சீதையை இலங்கைக்குக் கொண்டு சென்று சிறை செய்வது, ராமர் கபந்தன் எனும் ராட்சசனை வதம் செய்வது, வானரன் சுக்ரீவனைத் தேடி பம்பா ஏரிக்கு செல்வது, அங்கே சபரிக்கு அருள் செய்வது, ருஷ்ய சிருங்க மலையயை நாடிச் செல்வது – ஆகியவை இடம் பெறுகின்றன.