Plum Marangal Poothuvittana - Audio Book

Pustaka Digital Media
Audiokniha
1 h 19 min
Nezkrácená verze
Hodnocení a recenze nejsou ověřeny  Další informace
Chcete ukázku o délce 7 min? Poslechnout si ji můžete kdykoli, i offline. 
Přidat

Podrobnosti o audioknize

இந்தத் தொகுப்பில் இருக்கும் 'ப்ளம் மரங்கள் பூத்து விட்டன' நான் இந்திய வட கிழக்குப் பிரதேசங்களில் இருந்தபோது எனக்கு ஏற்பட்ட அனுபவங்களினால் பிறந்தவை.

'ப்ளம் மரங்கள் பூத்துவிட்டன' மேகாலய மாநிலத்தின் தலைநகர் ஷில்லாங்கைப் பின்னணியாகக் கொண்டது. ஷில்லாங் வெகு அழகான மலைவாசஸ்தலம். நான் அதன் இயற்கை அழகை என்னை மறந்து ரசித்து அமர்ந்த நாட்கள் அநேகம். அங்கு ப்ளம்மரங்கள் பூக்கும்போது பார்க்கக் கிடைக்கும் காட்சி தெய்வ தரிசனம் போன்றது. அங்கு எங்களுக்குப் பரிச்சயமான ஒரு அஸ்ஸாமிய குடும்பத்தில் நான் மனோவியல் ரீதியாக அவர்களது பிரச்சினையை அணுக முயன்றதன் வெளிப்பாடே இந்த நெடுங்கதை. இது எங்கு வேண்டுமானாலும் நிகழக்கூடிய கதைதான். ஆனால் நான் ஷில்லாங்கில் இருந்தபோது சந்தித்த கதாபாத்திரங்கள் என்பதால் அதன் இயற்கைப் பின்னணியில் எழுதினேன். நான் எந்த மாநிலப் பின்னணியில் கதைகள் எழுதினாலும், தமிழ் வாசகர்கள் கதை மாந்தருடன் நெருக்கம் காண தமிழ் பேசும் பாத்திரங்களை உருவாக்க வேண்டியது அவசியம் என்று தோன்றியதால் அநேகமாக அத்தகைய பாத்திரங்கள் அக்கதைகளில் இடம் பெறுவது வழக்கமாகிப் போயிற்று. இக்கதையிலும் அப்பாவாக வரும் பாத்திரம் ஒரு தமிழர்.

O autorovi

மைசூர் பல்கலைக்கழகப் பட்டதாரி. நாவல்கள், குறுநாவல் தொகுப்புகள், சிறுகதைத்தொகுப்புகள், பயணக்கட்டுரை நூல்கள் என்று ஐம்பதுக்கும் மேலான நூல்கள் பதிப்பிக்கப் பெற்றுள்ளன. குறிப்பிடத்தக்க பத்திரிகையாளரும் கூட. இந்தியா டுடேயின் தமிழ்ப் பதிப்பின் ஆசிரியராக 9 ஆண்டுகள் வெற்றிகரமாகப் பணியாற்றி துணிச்சலான பத்திரிகையாளர் என்று முத்திரை பதித்தவர். கலை, கலாசாரம் அரசியல் என பல்வேறு புள்ளிகளை தொட்டுச் செல்லும் அவரது கட்டுரைகளில் பல அவை வெளி வந்த காலத்தில் தீவிர கவனம் பெற்றதுடன் விவாதங்களையும் தோற்றுவித்தன.

கலாசார பரிவர்த்தனைத் திட்டத்தின் கீழும் பல வெளிநாட்டு - இலக்கிய அமைப்புகளின் அழைப்பின் பேரிலும் உலக எ ழுத்தாளர் மாநாட்டுக்காக, சொற்பொழிவுகளுக்காக குறிப்பான பிரச்சினைகளை ஆராயும் பொருட்டு என்று பல்வேறு நாடுகளுக்குச் சென்று வந்தவர்.

பெண் சார்ந்த பிரச்சினைகளைப்பற்றி பல ஆய்வுக் கட்டுரைகள், ஆய்வறிக்கைகள் எழுதி வருபவர். கூர்மையான அரசியல் ஆய்வாளர். இவர் இந்தியா டுடேயில் ஆசிரியராகப் பணியாற்றிய காலத்தின் போது ஏற்பட்ட தமிழ் நாட்டு அரசியல் நிகழ்வுகளை தமது அரசியல் சார்பற்ற பார்வையுடன் ஆங்கிலத்தில் எழுதிய 'CUT OUTS, CASTE AND CINE STARS' என்ற புத்தகத்தை பெங்குவின் பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது.

பஞ்சாப், இலங்கை , ஃபீஜி நாடுகளின் இனப் பிரச்சினைகளைப் பின்புலமாக வைத்து இவர் எழுதிய நாவல்கள் - மௌனப் புயல், நிற்க நிழல் வேண்டும், தாகம் குறிப்பிடத் தகுந்தவை. மெளனப் புயல் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு பஞ்சாம் சாகித்திய அகாதெமி விருது பெற்றது. சமூக நாவலான 'ஆகாச வீடுகள் ஹிந்தியிலும் ஆங்கிலத்திலும் மலையாளத்திலும் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. ஹிந்தி மொழிபெயர்ப்பிற்கு உத்தர் பிரதேஷ் சாஹித்ய சம்மான் விருது கிடைத்தது.

சமீபத்தில் வாஸந்தி சிறுகதைகள்' என்ற தொகுப்பிற்கு தமிழக அரசின் சிறந்த நூல் விருது கிடைத்தது.

Ohodnoťte tuto audioknihu

Sdělte nám, co si myslíte.

Informace o poslechu

Telefony a tablety
Nainstalujte si aplikaci Knihy Google Play pro AndroidiPad/iPhone. Aplikace se automaticky synchronizuje s vaším účtem a umožní vám číst v režimu online nebo offline, ať jste kdekoliv.
Notebooky a počítače
Knihy zakoupené ve službě Google Play můžete číst prostřednictvím webového prohlížeče ve svém počítači.