Magathalinukkoru Veedirunthathu

· Pustaka Digital Media
Ebook
124
Pages
Ratings and reviews aren’t verified  Learn More

About this ebook

சிறுகதை என்பது வாழ்க்கையின் ஓர் காணா நிழலைச் சொல்லும் கலை. சில பக்கங்களில் ஒரு காலத்தை, சில வரிகளில் ஒரு மனிதனை, சில எழுத்துகளில் ஒரு உயிரின் இருப்பைப் பதிவு செய்யும் வல்லமைப் படைத்ததுதான் சிறுகதை. கடந்த, நிகழ்கின்ற, வரப்போகின்ற, வரவே‌ முடியாத காலங்களையும், கற்பனை மற்றும் கனவில் மட்டும் சாத்தியப்படுகிற ஜாலங்களையும் கதைகள் நம்முன் காட்சிப்படமாக்கி விடுகின்றன. “மகதலீனுக்கொரு வீடிருந்தது” என்னும் இக்கதைத் தொகுப்பு கடந்த காலத்தின் சுவடுகள்.

நாம் மறந்து விட்ட கதைகளையும், மனிதர்களையும், சமூக அமைப்புகளின் சடங்காச்சாரங்களையும், அனுதின நடபடிகளையும் நினைவிற்குக் கொண்டு வருகின்றன.

இந்தத் தொகுப்பில் உள்ள ஒவ்வொரு கதையும், நம்மை நம் நினைவுகளின் நடுவே இழுத்துச் செல்லும்! சில நேரங்களில் நம்மை மறந்துவிடச் செய்யும்!! சில வேளைகளில் நம்மை நாமே மீண்டும் கண்டுகொள்ளச் செய்யும்!!!

எழுத்தாளர் காமராஜ் அவர்கள் எழுதிய இத்தொகுப்பில், கதைகள் வெறும் கற்பனைகள் அல்ல - அவை உணர்வுகள், எதிர்பார்ப்புகள், அனுபவங்களின் வெளிப்பாடுகள்.

About the author

விருதுநகர் மாவட்டம் சாத்தூருக்கருகே உள்ள நடுசூரங்குடியில் பிறந்தவர்.பாண்டியன் கிராமவங்கி ஊழியரானதிலிருந்து தொழிற்சங்கத் தலைமைப்பொறுப்புகள், எழுத்து, ஆவணப்பட இயக்கம், சமூக ஈடுபாடு ஆகியவற்றில் கவனம் செலுத்தியவர்.1987 ஆம் ஆண்டு எழுதிய பூச்சிக்கிழவி சிறுகதையின் மூலம் எழுதத் துவங்கியவர்.

ஒரு வனதேவதையும் இரண்டு பொன் வண்டுகளும், கருப்பு நிலாக் கதைகள்,வெயிலின் நியதி சிறுகதைத் தொகுப்புகளும், அடர்கருப்பு என்கிற வலைத்தள எழுத்தும் பெரிதும் கவனம் பெற்ற வைகளாகும். வங்கிப்பனி ஓய்வுக்குப்பின் இரண்டு நாவல்களும் இரண்டு கட்டுரைத் தொகுப்புகளும் எழுதிக் கொண்டிருக்கும் இவர் தற்போது விருதுநகர் மாவட்ட நிர்வாகத்தின் கீழ் இயங்கிவரும் கரிசல் இலக்கியகழகத்தின் செயற்குழு உறுப்பினர். விளிம்பு மக்களின் வாழ்வியல்,விருதுநகர் மாவட்ட வட்டார வழக்கு ஆகியற்றுக்காக இவரது முதலிரண்டு சிறுகதைத் தொகுப்புகள் ஆய்வுகளுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கிறது. எழுத்துப் பணிக்காக 2024 செக்கினா இசைப்பள்ளி வழங்கிய புரட்சிக்கவி பாரதி விருதும், 2025 ஆம் ஆண்டுக்கான குடியரசுத்தின விருதும் பெற்றிருக்கும் இவர் சமம் அறக்கட்டளை என்கிற அமைப்பை உருவாக்கி பெண்கல்வி, பெண்கள் விழிப்புணர்வு பொருளாதார முன்னேற்றம் ஆகிய பணிகளைச் செய்து வருகிறார். மனைவி சுகந்தி மகன்கள் கிஷோர்பாரதி, சூரியபாரதி.

Rate this ebook

Tell us what you think.

Reading information

Smartphones and tablets
Install the Google Play Books app for Android and iPad/iPhone. It syncs automatically with your account and allows you to read online or offline wherever you are.
Laptops and computers
You can listen to audiobooks purchased on Google Play using your computer's web browser.
eReaders and other devices
To read on e-ink devices like Kobo eReaders, you'll need to download a file and transfer it to your device. Follow the detailed Help Center instructions to transfer the files to supported eReaders.