
DHIVYAPRIYA S
கல்கியின் "சிவகாமியின் சபதம்" தமிழின் மிகச் சிறந்த நாவல்களுல் ஒன்றாக கருதுகிறேன். கல்கியின் வர்ணிக்கும் திறனை கண்டு நேரம் செல்வது தெரியாமல் மெய் மறந்து படித்தேன். இதில் பல்லவர்கலுக்கு சிற்பங்கள் மற்றும் ஓவியங்கள் மீது இருந்த தீராத பற்றினை அறிந்தேன். இக்கதையை வாசிக்கும் போது அனைத்து கதாபாத்திரங்களும் என் மனக்கண் முன் தோன்றின. இதில் நட்பு, காதல், தந்தை மகன் உறவு, பல்லவ நாட்டின் எழில், ஆட்சியில் தலைசிறந்த மன்னன் என கதை முழுமை பெற்றுள்ளது. இதன் பின் "பார்த்திபன் கனவு" அவசியமாக படிக்க வேண்டிய கதை. அற்புதமான கதையை கொடுத்த கல்கி அவர்களுக்கு நன்றி!!! --கல்கியின் ரசிகை