எழுத்து உலகில் இவரது குரு கிருஷ்ணா டாவின்சி என்னும் வேங்கட கிருஷ்ணன். சிறுவயதில் குழந்தைகளுக்கு கதை சொல்லும் பழக்கம் கொண்ட இவர், பக்கத்து வீட்டு பெண்மணியின் பொறாமைக்கும் ஏச்சுக்கும் ஆளானதால் மனதிற்குள் சவால் விட்டுக் கொண்டார்.
அதன் விளைவாக 1990 ஆம் ஆண்டு குங்குமச்சிமிழில், ‘அபாயம் 62’ முதல் நாவல் வெளிவந்தது. அதை தொடர்ந்து ‘ஜூலியா ஜூலியா’. இதுவரை வெளிவந்த சிறுகதைகள் நாற்பத்தி இரண்டு. (குமுதம், பாக்கியா, மின்மினி, சூப்பர் நாவல்). எழுத்தாளர்கள் சுபா அவர்களிடம் முதல் பரிசு பெற்ற கதை ‘இறந்து பார்க்க வேண்டும்’. அரசு வேளாண் துறையில் உயரதிகாரியாக பணியாற்றிய இவரை, மீண்டும் எழுத தூண்டியவர் சகோதரி உமா அபர்ணா. அதன் விளைவாக ‘சில ரகசியங்கள் ரகசியமானவை’, ‘மாக்ளா ராணி’ நாவல்கள் வெளிவந்தன. ‘புஸ்தகா’வை கைகாட்டி அழைத்துச் சென்ற பெருமைக்கு உரியவர்கள் சரித்திர நாவலாசிரியர்கள் அனுராஜ், சகோதரி செல்லம் ஜெரீனா மற்றும் உமா அபர்ணா. வேளாண்மைப் பட்டதாரியான இவரது சொந்த ஊர் தேனி மாவட்டம் சுருளிப்பட்டி கிராமம். எனவே புனைப்பெயர் சுருளியூர் ரவி. இவரது வயது 67.