சுதர்சனனைப் போன்ற எதிர் நீச்சலிடும் இளைஞர்களின் எண்ணிக்கை குறைவதுதான் கவலைப்படுவதற்கும் பயப்படுவதற்கும் உரியது.
ஒரு சமுதாயத்தில் அப்படி இளைஞர்கள் இருப்பது சமுதாய லாபமாகக் கணக்கிட்டுப் பெருமைப்பட வேண்டியது ஆகும் என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். அப்படிப் புரிந்து கொண்டும், அறிந்து கொண்டும் உணர்ந்து இந்த நாவலைப் படிப்பார்களானால் அவர்களுக்கு நான், மிகவும் நன்றியுடையவனாவேன்.