உங்கள் வாழ்க்கையில் மட்டும் எப்படி இப்படி சம்பவங்கள்.. பிரமிப்புட்டுகிறது
இது கதை போலவே இருக்கிறதே நிஜமாக நடந்ததா
இப்படியெல்லாம் கேட்பவர்களுக்கு
எழுதுவதற்கு தேவையான சம்பவங்களை என் வாழ்க்கையிலிருந்தே எடுத்துக் கொள்கிறேன். ஒரு கதையில் ( ? !) வரும் சம்பவங்கள் எல்லாம் அந்த நிகழ்வில் மட்டுமே நிகழ்ந்ததாக இருக்க அவசியமில்லை என்று நினைக்கிறேன்
எழுதுவதில் இருக்கும் நிஜம் கற்பனை கலவை விகிதாச்சாரம் வெளியிலே சொல்லி விட்டால் அதில் சுவாரசியம் இருக்காது என நினைக்கிறேன்.
First person ல் எழுதுவதில் இருக்கும் சௌகரியம் எல்லாப் புகழையும் எனக்கே கொண்டு வந்து சேர்த்துவிடுகிறது.. இதனால் பிறத்தியாரின் அனுபவங்களை நான் கடன் வாங்கியிருப்பது சாமர்த்தியமாக மறைக்கப்படுகிறது என நினைக்கிறேன்
மொத்தமாக நிஜம் எழுதும் போது கதை தொலைந்து போகுமென்று நினைக்கிறேன்..
எது நிஜம் எது பொய் என்று யோசிக்காமல் படிக்க வைத்துவிட்டால் எழுத்து ஜெயித்த மாதிரி தான்
சமீபத்திய போஸ்ட் ஒன்றுக்கு ராஜகோபாலன் கோவிந்தராஜன் என்பார் இப்படி கமென்ட் எழுதியிருந்தார்
"நல்ல வடிவம். வாசிக்க தூண்டும் அமைப்பு. ஆனால் தன் மேல் உள்ள தப்பை போலியை மிக அழகாக மறைக்கும் புத்திசாலித்தனம். ஒரு வேளை இது தான் இலக்கியம் சார்ந்த “இண்டெலிக்சுவலிசமோ "
யோசித்துப் பார்த்தால் நிஜம் தான் என ஒப்புக் கொள்ளத் தோன்றுகிறது.
Chandramowleeswaran. V