ஆதி மனிதனின் அன்றாட வாழ்க்கையின் பெரும்பான்மையான நேரம் , உணவு தேடுவதிலேயே செலவழிந்தது.
ஆனால் ஆற்றங்கரையில் வாழ்ந்தவர்களுக்கு உணவு கிடைப்பது எளிதாக இருந்தது. ஆற்றங்கரையோரம் இருந்தவர்களுக்கு விவசாயம் செய்ய முடிந்தது. அதனால் அவர்களுக்கு அதிக ஓய்வு நேரம் கிடைத்தது.
சிந்திக்க நேரம் கிடைத்தது. அதனால் , நாகரிகம் வளர்ந்தது.
உலகத்தில் முதன் முதலில் நாகரிகம் வளர்ந்தது நான்கு முக்கிய ஆற்றங்கரைகளில்.
எகிப்தின் நைல் நதி நாகரிகம், டைக்ரிஸ் யூப்ரடிஸ் நதியின் மெசபடோமியா நாகரிகம், சீனாவில் உள்ள மஞ்சள் ஆற்று நாகரிகம், சிந்து நதிக் கரையின் சிந்துவெளி நாகரிகம். திராவிட இன மக்கள் சிந்து சமவெளி நாகரிக மக்களின் வழித்தோன்றியவர்களாக இருக்கக்கூடும்.
புதைபொருள் ஆராய்ச்சி மூலம் சிந்து சமவெளி மக்களின் வாழ்க்கை முறைகளை அறிந்து கொள்ள முடிகிறது.
இராசமாணிக்கனார் அவர்கள் அழகிய தமிழில் தொகுத்து வழங்கியுள்ளார்.
படித்து பயன்பெறுங்கள்.