இயற்பெயர்: வரதராஜன் அ.
புனைப்பெயர்: ஜூனியர் தேஜ்
ரத்த வகை: O +ve
பிறந்த தேதி: 04.06.1962
குடும்பம்: மனைவி, மகன், மருமகள்
பணி: ஓய்வு பெற்ற உதவித்தலைமை ஆசிரியர், மனநல ஆலோசகர்
கல்வித் தகுதி: MA(English).,M.Sc (Counselling Psychology)., B.Ed., CLIS.,
முதல் ஜோக்: ஜூனியர் விகடன் 1980 களில், சரியான தேதி இல்லை
முதல் சிறுகதை: சிற்றன்னை - குங்குமம், 24.03.1995
பரிசுகள்:
• 1999 கல்கி சிறுகதைப் போட்டி (பூமி இழந்திடேல்) (ஆறுதல் பரிசு) • 2000 தினமணி கதிர் (கற்றது ஒழுகு) (ஆறுதல் பரிசு) • 2002 பன்மலர் சிற்றிதழ் சிறுகதைப்போட்டி (முதல் பரிசு) (தன்மை இழவேல்) • 2023 கௌரா இலக்கிய மன்றச் சிறுகதைப் போட்டி (மூன்றாம் பரிசு) (தலைமுறைகள்) • இலக்கியபீடம்-2023 மாத இதழ் - மாம்பலம் சந்திரசேகர் இணைந்து நடத்திய சிறுகதைப்போட்டியில் 'அம்மா வீடு' என்ற சிறுகதை சிறப்புப் பரிசு பெற்றுள்ளது. • திறனாய்வு - இலங்கை குரு அரவிந்தன் வாசகர் வட்டம் நடத்திய திறனாய்வுப் போட்டி- 2023 ல் இரண்டாவது பரிசு. • இலங்கை குரு அரவிந்தன் வாசகர் வட்டம் நடத்திய திறனாய்வுப் போட்டி- 2025 ல் நான்காவது பரிசு. • நன்னங்குடி அறக்கட்டளை போட்டி வைத்து வெளியிட்ட சிறுகதைத் தொகுப்பில் 'இளம் விஞ்ஞானி' என்ற சிறுகதை இடம்பெற்றுள்ளது. • அனிச்சம் 2023 சிறுகதைப் போட்டியில் 'போதி மரம்' என்ற சிறுகதை இரண்டாம் பரிசு பெற்றுள்ளது. • நாவல்: எண்ணற்ற வாசகர்களின் வரவேற்பைப் பெற்ற கலியன் மதவு என்ற சமூக நாவல், விகடன் இணையத்தில் 28 அத்தியாயங்கள் பிரசுரமாகின. • உலகப் புகழ் பெற்ற புஸ்தகா நிறுவனம் மூலம், படங்களோடு, 820 பக்கங்கள் கொண்ட மின் புத்தகமாகவும்; படங்கள் இன்றி, 416 பக்கங்களில் புத்தகமாகவும் வெளிவந்துள்ளது கலியன் மதவு என்ற சமூக நாவல். • கலியன் மதவு என்ற புதினம் ‘பாரதி இலக்கியப் பேரவை, கம்பம் (தேனி மாவட்டம்) நடத்திய உலகளாவிய நூல் போட்டியில் இரண்டாம் பரிசு பெற்றுள்ளது. • தமிழ்ப் பல்லவி 2023ல் நடத்திய போட்டியில் ‘தோழர்’ என்ற சிறுகதை சிறப்புப் பரிசு பெற்றது. • 11.02.2004 தினகரன் மகளிர் மலரில், ‘மீண்ட சொர்க்கம்’ என்ற காதலர் தினச் சிறப்புச் சிறுகதை 5000 ரூபாய் பரிசு பெற்றது. • பத்து லட்சம் ரூபாய்’ என்ற சிறுகதை 2024 ல் நடை பெற்ற அன்னை குருபாக்கியம் நினைவுச் சிறுகதைப் போட்டியில் சிறப்புப் பரிசு ரூபாய் 1000 பெற்றது. • மேலும், ‘ஜூனியர் தேஜ் பேஜ்’ – என்ற பொதுத் தலைப்பில் 5 பாகங்கள் சிறுகதைகள் வெளியிடப்பட்டுள்ளன. • நூல் வெளியீடு • 6 நூல்கள் ஐந்து சிறுகதைத் தொகுதிகள். ஒரு மெகா நாவல் (கலியன் மதவு) • இலட்சியம்: தனித்துவமான நாவல்கள், சிறுகதைகள் எழுதுவது. • எழுத்துச் சித்தருடன் சந்திப்புஎன் முதல் படைப்பான ‘சிற்றன்னை’ என்ற சிறுகதையுடன் எழுத்துச் சித்தரிடம் ஆசீர்வாதம் பெறச் சென்றபோது அவர் எழுதிக் கொடுத்த பொக்கிஷம். எழுத்துச் சித்தர், “வரதராஜா……….! உனக்குச் சிறுகதை நன்னா வருது. நிறைய எழுது..” என்று ஆசீர்வதித்த அந்த நாள் இன்று போல என் காதுகளில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது.
மின்னஞ்சல்:- [email protected]
ப்ளாக் :- https://juniortej.blogspot.com