அங்கிருந்து வெளியேறி தத்தம் இருத்தலை நகர நெரிசலுக்குள் புழங்கி மீண்டு தங்களின் வாடகைக் குடியிருப்புகளுக்கான தனித்துவத்துவத்தையும் பேணிக்கொள்பவை.
அய்யப்பன் இப்பற்றின்மை மீதான தனது உற்று நோக்கலைக்கொண்டு காட்சியும் கதையுமாக அங்கே கவிந்திருக்கும் அன்பின் வலைப்பின்னலை நமக்கு உளவியலாகவும் கவித்துவமாகவும் தந்துவிடுகிறார் தானாக நிறையும் கிணற்றடி கதைகளில் துலங்கிய பெண் மனோபாவங்கள் தொட்டு இயற்கையும் பெண்ணுமாகிய உறவு நிலைகளில் இவ்வுலகை அனாசயமாக துல்லிதமாக விவரிக்கும் இவ்வகை யதார்த்தம் நவீன பாடுபொருட்களில் நமது இடத்தையும் காலத்தையும் அளவிட்டுச் சொல்ல முயல்கின்றன.
1966-ஆம் வருடம் ஏப்ரல் 18ம் தேதி நாட்டரசன் கோட்டையில் பிறந்தவர். கவிஞர் மீரா அவர்களால் அறிமுகம் செய்யப்பட்ட கவிஞர். இதுவரை 14 கவிதை நூல்களும் ஒரு சிறுகதை நூலும் ஒரு தேர்ந்தெடுத்த கவிதை நூலும் ஒரு ஹைக்கூ திறனாய்வு நூலும் வந்திருக்கிறது. புகைப்படத் துறையிலும் பணியாற்றி வருகிறார். இதுவரை மூன்று குறும்படங்களை இயக்கியிருக்கிறார். இவருடைய ஒரு கவிதை, ஒளிப்பதிவாளர் செழியன் அவர்களால் குறும்படமாக எடுக்கப்பட்டது. இப்போது திரைப்படம் இயக்கம் முயற்சியில் இருந்து கொண்டிருக்கிறார்.