Dharmangal Sirikindrana

· Pustaka Digital Media
Rafbók
210
Síður
Einkunnir og umsagnir eru ekki staðfestar  Nánar

Um þessa rafbók

அமரர் எஸ். ஏ. பி.க்கு நேரு குடும்பத்தின் மீது அபார மதிப்பு, பக்தி. நேருவின் காலத்துக்குப் பிறகு, மத்திய அரசில் சரியான தலைமை கிடைக்காமல் தேசம் திண்டாடியபோது இந்திராகாந்தி பிரதம மந்திரியாகப் பதவியேற்றதில் அவர் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. இந்திராகாந்தி நெருக்கடி நிலை பிரகடனப்படுத்தி, கடுமையான நடவடிக்கைகள் மேற்கொண்டபோது, அதை ஆதரித்த ஒரே பத்திரிகை ஆசிரியர் எஸ். ஏ. பி. தான்.

இந்திராகாந்தி பதவி இழந்தபோது எஸ். ஏ. பி. அளவற்ற துயரம் அடைந்தார். அந்த அரசியல் பின்னணிகளை வைத்து, ஆனால் துளியும் அரசியல் நெடி அடிக்காமல், ஒரு நாவல் எழுதும்படி என்னைத் தூண்டினார். ஊக்கம் தந்தார். அவ்வப்போது ஆலோசனை வழங்கினார். 1978ம் ஆண்டு வாக்கில் ‘தர்மங்கள் சிரிக்கின்றன' என்ற தலைப்பில் நான் தொடர்கதை எழுதியதின் பின்னணி இதுதான்.

கதாநாயகிக்கு இந்து என்று பெயர் சூட்டியதோடு, பல அந்த நாளைய அரசியல் தலைவர்களின் குணாதிசயங்களையும் இந்தக் கதையில் கலந்தேன். அரசியல் வரலாறு தெரிந்தவர்களுக்கு, அவர்கள் யார் யாரென்று புரியும்.

கதையின் ஓர் அம்சம்தான் அப்படியே தவிர, இது ஒரு காதல் கதை. இப்போது புரூப் படிக்கையில், இந்து - ஜெயந்த் காதல் நிறைவேறியதாக முடித்திருக்கலாம் என்று தோன்றுகிறது. ஜெயந்தை மனமார நேசித்துவிட்டு, நெருங்கிப் பழகிவிட்டு, பிறகு வேறொருவனைக் கைப்பிடிப்பதாக எழுதியிருக்க வேண்டாம் என்று நினைக்கிறேன். (வாசகர்கள் எப்படி நினைக்கிறார்களோ!)

ரா. கி. ரங்கராஜன்

Um höfundinn

ரா.கி.ரங்கராஜன் : 5.10.1927-ல் கும்பகோணத்தில் பிறந்தார் தந்தை மகாமகோபாத்தியாய ஆர்.வி. கிருஷ்மாச்சாரியார், மிகப் பெரிய சமஸ்கிருத வித்வான். ரங்கராஜன், தனது 16வது வயதில் எழுத ஆரம்பித்தார். 1946-ல் 'சக்தி' மாத இதழிலும் 'காலச்சக்கரம்' என்ற வார இதழிலும் உதவி ஆசிரியராகத் தொடர்ந்தார். 1950-ல் 'குமுதம்' நிறுவனம் சிறிது காலம் நடத்திய 'ஜிங்லி' என்ற சிறுவர் இதழில் சேர்ந்து, குமுதம் இதழில் 42 ஆண்டு காலம் உதவி ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார். இவர் 1500க்கும் மேற்பட்ட சிறுகதைகளும், 50 நாவல்களும், ஏராளமான கட்டுரைகளும், மொழிபெயர்ப்பு நாவல்களும் எழுதியுள்ளார். இவருடைய மூன்று நாவல்கள் திரைப்படமாக வெளிவந்துள்ளன. பல படைப்புக்கள் சின்னத்திரையிலும் இடம் பெற்றுள்ளன. ரங்கராஜன் 'சூர்யா', 'ஹம்ஸா ', 'கிருஷ்ணகுமார்', 'மாலதி', 'முள்றி', 'அவிட்டம்' - போன்ற புனைப்பெயர்களில் தரமான சிறுகதைகள், வேடிக்கை நாடகங்கள், துப்பறியும் கதைகள், குறும்புக் கதைகள், மழலைக் கட்டுரைகள், நையாண்டிக் கவிதைகள்-என பலதரப்பட எழுத்துக்களைத் தந்தவர், ஒவ்வொரு புனைப் பெயருக்கும் - நடையிலோ, கருத்திலோ, உருவத்திலோ எதுவம் தொடர்பு இல்லாமல் தனித்தனி மனிதர்போல் எழுதிய மேதாவி. இந்தப் பல்திறமைக்கு ஒரே ஒரு முன்னோடி தான் உள்ளர்.

- கல்கி


'ரங்கராஜன் ஒரு கர்ம யோகி, குமுதம் ஸ்தாபன விசுவாசம், ஆசிரியர் எஸ்.ஏ.பி. மேல் பக்தி, கிடைத்தது போதும் என்கிற திருப்தி, சக எழுத்தாளர்கள் மேல் பொறாமையற்ற பிரிவு, நேசம், வெள்ளைச் சட்டை, வெள்ளை வேட்டி, நண்பர்களைக் கண்டால் கட்டியணைத்து முதுகில் ஒரு ஷொட்டு-இவைதான் இவருடைய சிறப்புகள்'.

- சுஜாதா

Gefa þessari rafbók einkunn.

Segðu okkur hvað þér finnst.

Upplýsingar um lestur

Snjallsímar og spjaldtölvur
Settu upp forritið Google Play Books fyrir Android og iPad/iPhone. Það samstillist sjálfkrafa við reikninginn þinn og gerir þér kleift að lesa með eða án nettengingar hvar sem þú ert.
Fartölvur og tölvur
Hægt er að hlusta á hljóðbækur sem keyptar eru í Google Play í vafranum í tölvunni.
Lesbretti og önnur tæki
Til að lesa af lesbrettum eins og Kobo-lesbrettum þarftu að hlaða niður skrá og flytja hana yfir í tækið þitt. Fylgdu nákvæmum leiðbeiningum hjálparmiðstöðvar til að flytja skrár yfir í studd lesbretti.