இந்த நாவலின் ஆசிரியர், எழுத்தாளரும் ஓவியருமான அப்புசிவா. சமூகம், வரலாறு, திகில், நகைச்சுவை இத்துடன் சிறார் கதைகள் என பல்வேறு வகைமைகளில் எழுதும் ஆர்வம்கொண்டவர் இதுவரை நான்கு நாவல்கள், இரண்டு சிறார் நூல்கள் அத்துடன் தமிழக அரசின் வாசிப்பு இயக்கம் சார்பாக ஒரு சிறார் படைப்பு ஆகியவை புத்தகமாக வந்துள்ளன. சித்திரக்கதைகளை வாசிப்பதுடன் உருவாக்குவதிலும் ஈடுபாடுள்ளவர்.
அறுபதுக்கும் மேற்பட்ட சிறுகதைகளும் எழுதியுள்ள இவரின் கதைகள், பல அமைப்புகளின் சிறுகதை போட்டிகளில் பரிசுகளும் பெற்றுள்ளன. “பூஞ்சிட்டு” (www.poonchittu.com) எனும் சிறார் இணைய இதழின் ஆசிரியர் குழுவில் ஓவியராக உதவி வருகிறார். நூல்களுக்கு அட்டைப்படங்கள், ஓவியங்கள் என இவரது ஆர்வம் தொடர்கிறது. தமிழில் சிறார் இலக்கியம் வளரவேண்டும் என்பதில் விருப்பமுடையவர்.