Ungal Ennangal Tharum Abaara Vetri

· Pustaka Digital Media · Pripovijeda Dr. Udhayasandron
4,5
18 recenzija
Audioknjiga
54 min
neskraćena
Ocjene i recenzije nisu potvrđene  Saznajte više
Želite li uzorak u trajanju od 5 min? Slušajte bilo gdje, čak i offline. 
Dodaj

O ovoj audioknjizi

இந்த நூலின் வாயிலாக உங்களைச் சந்திப்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். இப்புத்தகத்தை முழுமையாகப் படித்து முடிக்கும்பொழுது உங்கள் வாழ்வில் மாற்றத்திற்கும், ஏற்றத்திற்குமான பல வழிகள் நிச்சயம் புலப்படும். ஏனெனில், இது வெறும் தன்னம்பிக்கை ஊட்டும் புத்தகம் மட்டுமல்ல, அதற்கும் மேலாக, நமது அன்றாட வாழ்வில் நாம் வெற்றிக்கான உத்திகளைக் கடைபிடித்து, ஓர் இனிய ஆரம்பத்தையும், அபார வெற்றியையும் தரப்போகும் புத்தகம் ஆகும்.

நான் கடந்த பன்னிரண்டு ஆண்டுகளாக பல்வேறு பயிற்சி வகுப்புகளில் பகிர்ந்து கொண்ட, பயிற்சிகளில் பயன்படுத்திய, வெற்றி கண்ட யுக்திகளை உங்களோடு பகிர்ந்துகொண்டிருக்கிறேன்.

மாற்றம் மட்டுமே என்றும் மாறாதது’. உலகில் நீங்கள் எங்கு இருந்தாலும் சரி, எந்த நிலையில் இருந்தாலும் சரி, இந்தப் புத்தகம் உங்கள் வாழ்வில் மாபெரும் திருப்பத்தை ஏற்படுத்தி வெற்றிகரமான மனிதராக உங்களை உருவாக்கப் போவது உறுதி.எண்ணங்கள் சீரானால் அனைத்தும் சீராகும்.

“எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் – அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு” என்றார் நமது தெய்வப்புலவர் திருவள்ளுவர். ஆகவே, சொல்வது யார் என்பதைவிட, சொல்லப்படும் விஷயங்களின் உண்மைத் தன்மையைக் காண்பதுதான் அறிவுடைமை ஆகும். திறந்த மனத்தோடு படியுங்கள். குறிப்பெடுத்துக் கொள்ளுங்கள். ஒரு கதைப் புத்தகம் படிப்பதுபோல படிக்காமல், ஒவ்வொரு கட்டுரைக்கும் நேரம் ஒதுக்கி, ஆழ்ந்து கேளுங்கள். இந்நூலில் உள்ள எண்ணங்களை உங்களின் எண்ணங்களோடு உரசிப் பாருங்கள்; உள்வாங்கிக் கொள்ளுங்கள். அவற்றை வாழ்க்கையில் பயன்படுத்துங்கள். இவை வெற்றிக்கான நிரூபிக்கப்பட்ட வழிமுறைகள். இவற்றை உங்கள் வாழ்க்கையில் கடைப்பிடித்தால், ‘அபார வெற்றி’ கிடைப்பது உறுதி. உங்கள் எண்ணங்களைப் பட்டைத் தீட்டி வாழ்வில் வெற்றியடைய என் மனமார்ந்த வாழ்த்துகள்.

பேரன்புடன்,

உதய சான்றோன்.

Ocjene i recenzije

4,5
18 recenzija

O autoru

இன்றைக்கு இலட்சக்கணக்காண மக்களுக்கு பயிற்சி அளித்து அவர்கள் வாழ்வில் ஒளியேற்றும் ஒரு சர்வதேச இளம் தன்னம்பிக்கை பயிற்சியாளர் திரு. உதயசான்றோன், இவர் சிந்தனை சிற்பி உயர் திரு. உதயமூர்த்தி அவர்களின் மாணவர், ஆயித்துக்கும் மேற்பட்ட தலை சிறந்த நிறுவனங்களுக்கு பயிற்சி அளிக்கும் முன்னணி பயிற்சியாளர்.

முன்னணி நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் மனிதவளத்தை மேம்படுத்தும் பயிற்சி வகுப்புகளை நடத்துவதில் பெரும் திறன் படைத்தவர். மனிதவளப் பயிற்சி வரலாற்றில் முதல்முறையாக 18 தலைப்புகளில் 72 மணி நேரம் தொடர்ந்து தொடர் பயிற்சிகள் வழங்கி சாதனை படைத்தவர்.

பயிற்சியாளர் என்ற முகத்தையும் தாண்டி சமூக சேவைகளில் பெரும் ஆர்வம் கொண்டவர். தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கும் பயிற்சி வழங்கிவருகிறார்.

தமிழக இளைஞர்களுக்கு நம்பிக்கையூட்டிய சிந்தனையாளர் எம். எஸ். உதயமூர்த்தியிடம் 1996 – 2013 வரை 17 ஆண்டுகள் நட்புடன் பழகிய நல்மாணவர்.

ஒரு மாணவராக ஆசிரியர் எம். எஸ். உதயமூர்த்தியை எடுத்த நேர்காணல் இணைப்பு you tube ல் இடம் பெற்றுள்ளது.

அமெரிக்கா, மெக்சிகோ, சீனா, ஜப்பான், சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து, இலங்கை போன்ற உலக நாடுகளுக்குச் சென்று பயின்றதோடு பயிற்சி அளித்த அனுபவமும் கொண்டவர்.

எம்.பி.ஏ., பட்டதாரியான உதயசான்றோன், மனித வளம் குறித்து பிஎச்டி ஆய்வில் பட்டம் பெற்றவர்.

பிரபல முன்னணி தொலைக்காட்சிகளில் உதயசான்றோனின் பேட்டிகள், நம்பிக்கை உரைகள், மனநலம், நம்பிக்கை தொடர்பான ஆலோசனைகள் தொடர்ந்து இடம் பெற்றுவருகின்றன.

ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஆர்எஸ் போன்ற சிவில் சர்வீஸ் தேர்வுகளை எழுதும் மாணவர்களுக்கு நம்பிக்கையளிக்கும் பயிற்சிகளை வழங்குகிறார்.

‘எண்ணங்கள் தரும் அபார வெற்றி’, 'வெற்றிக்கு 16' என்ற வெற்றிகரமான நூலின் ஆசிரியர். 'உங்கள் எண்ணங்கள் தரும் அபார வெற்றி', 'நம்புங்கள், நீங்களும் கோடீஸ்வரர்தான்', 'உறுதியான வெற்றியை தரும் நேர மேலாண்மை' என்கிற மூன்று ஒலிப் புத்தகங்களையும் வெளியிட்டுள்ளார்.

இவரின் தொடர்புக்கு +91 91711 71473, [email protected]

Ocijenite ovu audioknjigu

Recite nam što mislite.

Informacije o slušanju

Pametni telefoni i tableti
Instalirajte aplikaciju Google Play knjige za Android i iPad/iPhone. Automatski se sinkronizira s vašim računom i omogućuje vam da čitate online ili offline gdje god bili.
Prijenosna i stolna računala
Knjige koje ste kupili na Google Playu možete čitati u web-pregledniku svojeg računala.