கவித்திறத்தால் கவிஞர்களுக்கே உரித்தான கர்வமும் அதனால் வரும் கம்பீரமும் கொண்டவன் கதாநாயன் முத்துக்குமரன். பாய்ஸ் கம்பெனியில் நாடகம் இல்லாத நேரத்திலும், நாதா தங்கள் சித்தம் என் பாக்கியம் என்று ஸ்திரி பார்ட்டில் முத்துக் குமரனோடு நடித்த கோபால் சென்னையில் பெரிய நடிகனாக இருக்கிறான். மாதவி துணை நடிகையாக இருந்து கோபால் சாரின் பழக்கத்தால் கதாநாயகியாக வளர்ந்ததால் அவன் கண்ணசைவுக்கு கட்டுப்பட்டு நடக்கும் விசுவாசி.